காஸா பள்ளத்தாக்கு பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட விமானதாக்குதலில் கர்ப்பிணிப்பெண் கைக்குழந்தை உட்பட மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.
காஸாவின் சுகாதார சேவை இதனை உறுதிசெய்துள்ளது.
எனாஸ் கம்னாஸ் என்ற 23 வயது கர்ப்பிணிப்பெண்ணும்,அவரது 18 மாத குழந்தையும் விமானதாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர் என காஸாவின் சுகாதார சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவரது கணவர் காயமடைந்துள்ளார், ஹமாஸ் போராளியொருவரும் கொல்லப்பட்டுள்ளார் 12 பேர்காயமடைந்துள்ளனர் என பாலஸ்தீன தகவல்கள் தெரிவித்துள்ளன.
இஸ்ரேல் இந்த உயிரிழப்புகள் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. எனினும் காஸாவிலிருந்து மேற்கொள்ளப்பட்ட ரொக்கட் தாக்குதல்களின் பின்னர் விமானதாக்குதல்கள் இடம்பெற்றதை இஸ்ரேல் உறுதிசெய்துள்ளது.
இஸ்ரேலின் இரு போர்விமானங்கள் 140 முக்கிய இலக்குகளை தாக்கின இதில் ஆயுத கிடங்குகளும் உள்ளன என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ரொக்கட் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர் என இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM