யாழ்ப்பாணத்தில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் வழங்கிய வாக்கு மூலத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணப்பிராந்திய போதை ஒழிப்பு பிரிவினரால் வவுனியாவில் நபர் ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடமிருந்து 3கிலோ 900கிராம் கேரளா கஞ்சாவினை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
கடந்த 7ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் யாழ்ப்பாணப்பிராந்திய போதை ஒழிப்புப்பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது வவுனியாவில் கஞ்சா வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நபர் தொடர்பாக தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து யாழ்ப்பாணப்பிராந்திய போதை ஒழிப்புப்பிரிவினரால் நேற்று இரவு 7மணியளவில் வவுனியா கூமாங்குளம் பகுதி வீடு ஒன்றினை சோதனை நடத்தியபோது 3கிலோ 900கிராம் கேரளா கஞ்சாவுடன் கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த தம்பிராசா அரவிந்தன் என்ற 21வயதுடைய நபரே கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர் கேரளா கஞ்சாவுடன் வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் இன்று நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM