ஈரானிய எண்ணெய் ஏற்றுமதிகளை பூஜ்ஜியமாக்குவதற்கான அமெரிக்காவின் திட்டம் வெற்றி பெறமாட்டாது எனவும் ஈரானிய எண்ணெய் ஏற்றுமதிகளை தடுத்து நிறுத்துவதற்கு அமெரிக்காவால் முடியாது எனவும் ஈரானிய வெளிநாட்டு அமைச்சர் ஜாவத் ஸரீப் நேற்று புதன்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானுடன் வர்த்தகம் மேற்கொள்வதற்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் உலகம் அமெரிக்க ஒருபக்கச் சார்பால் களைப்படைந்துள்ளதாக அவர் கூறினார்.
அவர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை வடகொரிய வெளிநாட்டு அமைச் சர் றி யொங் ஹோவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது அமெரிக்காவால் மீள விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகள் குறித்து அவர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
ஈரானுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடைகள் என்றுமில்லாத வகையிலான மோசமான தடைகள் என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து செவ்வாய்க்கிழமை பின்னிரவு ஜாவத் ஸரீப் சமூக இணையத்தளத்தில் விடுத்த செய்தியில், "உலகம் டொனால்ட் ட்ரம்பின் பக்கச்சார்பால் களைப்படைந்து விட்டது. அதனால் உலகம் உணர்ச்சிவசப்பட்ட (ட்ரம்பின்) டுவிட்டர் உத்தரவுகளைப் பின்பற்றப்போவதில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்யா, சீனா மற்றும் ஏனைய தமது வர்த்தகப் பங்காளிகளிடம் இது தொடர்பில் கேட்டறிந்து கொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தற்போது அமெரிக்காவால் ஈரானுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடைகள் இதற்கு முன்னர் விதிக்கப்பட்ட தடைகளுடன் ஒப்பிடுகையில் அந்நாட்டை மிகவும் குறைந்த அளவிலேயே பாதிப்பனவாக உள்ளன என சர்வதேச நெருக்கடி குழுவில் ஈரானிய திட்ட பணிப்பாளராக கடமையாற்றும் அலி வாயஸ் தெரிவித்தார்.
டொனால்ட் ட்ரம்ப் காலப்போக்கில் தனது திட்டம் தொடர்பில் ஏனைய உலக நாடுகளிடமிருந்து இணக்கப்பாட்டை பெற எதிர்பார்த்துள்ள நிலையில் சீனா மற்றும் ரஷ்யா உள்ளடங்கலான பல நாடுகள் அதற்கு இணங்காதுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
அதன் காரணமாக அமெரிக்காவால் புதிதாக விதிக்கப்படும் தடைகள் முன்னர் ஈரானுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடைகள் போன்று பயனுறுதிப்பாடு மிக்கவையாக அமையாது என அவர் தெரிவித்தார்.
அமெரிக்கா ஈரானுக்கு எதிராக தடைகளை விதித்துள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றிய வெளிநாட்டுக் கொள்கைத் தலைவர் பெடெறிக்கா மொகெரினி, ஈரானுடன் மேலும் வர்த்தகங்களை மேற்கொள்ளப் பிராந்திய கம்பனிகளை ஊக்குவித்துள்ளார். ஈரான் தனது அணுசக்தி நிகழ்ச்சித் திட்டத்தை வரையறை செய்வது என்பது தொடர்பில் உறுதிப்பாட்டுடன் உள்ளதாக அவர் கூறினார்.
"நாங்கள் ஈரானை தொடர்ந்து அந்த உடன்படிக்கையைப் பேண வைப்பதற்கு எம்மால் முடிந்ததை செய்யவுள்ளோம். அதன் பிரகாரம் ஈரானிய மக்களுக்கு பொரு ளாதார அனுகூலங்களை தொடர்ந்து வழங்கவுள்ளோம். அந்த உடன்படிக்கை எமது பிராந்தியத்துக்கு மட்டுமல்லாது உலகின் பாதுகாப்பு அக்கறைகளுக்கு அமைவானது என நாம் நம்புகிறோம்" என பெடெறிக்கா மொகெரினி நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நியூஸிலாந்தின் வெலிங்டன் நகருக்கான தனது பயணத்தின் போது ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கையில் கூறினார்.
அமெரிக்கா ஈரான் மீது திரும்பவும் தடைகளை விதித்துள்ளமை குறித்து தாம் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக ரஷ்ய வெளிநாட்டு அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேசமயம் சீனாவும் அமெரிக்கத் தடைகளுக்கு பகிரங்க எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM