வெல்லம்பிட்டியவில் மூவர் கைது!!!

Published By: Digital Desk 7

08 Aug, 2018 | 11:39 AM
image

(இரோஷா வேலு) 

வெல்லம்பிட்டிய - சேதவத்தை கருப்பு பாலம் எனப்படும் பாலத்தின் அடியில் சந்தேகத்தின் பேரில் நடமாடிய மூவரை இராஜகிரிய புலனாய்வுத் துறை பொலிஸார் கைது செய்து இன்று அளுத்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இச்சம்பவத்தின் போது வாதுவ, மருதானை மற்றும் ரிதிகம பிரதேசங்களைச் சேர்ந்த 30, 36 மற்றும் 29 வயதுகளையுடைய மூன்று நபர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருப்பு பாலத்தின் அடியில் போதைப்பொருட்கள் கைமாற்றப்படுவதாக இராஜகிரிய புலனாய்வுத் துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.

இத் தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்டு வந்த தேடுதலின் போது பாலத்தின் அடியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய மூவர் சுற்றிவளைக்கப்பட்டனர். 

இவ்வாறு இவர்களை சுற்றிவளைத்த வேளையில் அவர்களிடம் காணப்பட்ட பயணப்பையிலிருந்து 10கிலோ 200 கிராம் நிறையுடைய கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டன. இதனையடுத்து குறித்த மூவரை அளுத்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளனர். 

மேலும் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இராஜகிரிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27