ஞனாசார தேரருக்கு எதிரான தீர்ப்பு இன்று

Published By: Vishnu

08 Aug, 2018 | 08:10 AM
image

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் நீதி­மன்றை அவ­ம­தித்­த­தாக கூறி, அவ­ருக்கு எதி­ராக தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று மேன் முறை­யீட்டு நீதி­மன்­றினால் அறி­விக்­கப்­ப­ட­வுள்­ளது. 

மேன் முறை­யீட்டு நீதி­மன்றின் தலைமை நீதி­பதி பிரீத்தி பத்மன் சூர­சேன, அர்­ஜுன ஒபே­சே­கர ஆகியோர் முன்­னி­லையில் இந்த  தீர்ப்பு இன்று வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

இந் நிலையில் நேற்று திடீ­ரென சுக­வீ­ன­முற்ற பொது பலசேனா செய­லாளர் கல­கொட அத்தே ஞா­ன­சார தேரர், ஸ்ரீ ஜய­வர்­தனபுர வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சை­க­ளுக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.

கல­கொட அத்தே ஞானசார தேர­ருக்கு இதற்கு முன்னர் சிறு­நீ­ரகப் பிரச்­சினை கார­ண­மாக இரு முறை சத்­திர சிகிச்சை செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் அது தொடர்பில்  ஏற்­பட்ட சுக­வீன நிலையைக் கருத்தில் கொண்டே அவர் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்பட்­ட­தா­கவும்  பொது பலசேனா அமைப்பு தெரி­வித்­தது.    நேற்று ஞான­சார தேர­ருக்கு வைத்­தி­ய­சா­லையில் பல பரி­சோ­த­னைகள்  முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள நிலையில் இன்று சத்­திர சிகிச்­சை­யொன்­றுக்கு உட்­ப­டுத்­தப்­ப­டலாம் என  வைத்­தி­ய­சாலை தகவல்கள் தெரி­வித்­தன.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 25 ஆம் திகதி ஹோமா­கம நீதிவான் நீதி­மன்றில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் பிரகீத் எக்­னெ­லி­கொட காணாமல் ஆக்­கப்­பட்­டமை தொடர்­பி­லான வழக்கு விசா­ர­ணை­களின் இடைநடுவே கலகம் ஏற்­ப­டுத்தும் வண்ணம் நடந்­து­கொண்டு நீதி­மன்றை அவ­ம­தித்­த­தாக அப்­போது ஹோமா­கம பிர­தான நீதி­வானும் தற்­போ­தைய கொழும்பு பிர­தான நீதி­வா­னு­மா­கிய ரங்க திஸா­நா­யக்க ஊடாக  ஞான­சார தேர­ருக்கு எதி­ராக மேன்முறை­யீட்டு நீதி­மன்றில் முறை­யி­டப்பட்­டி­ருந்­தது.

இது தொடர்பில்  நீன்ட விசா­ர­ணைகள் இடம்­பெற்று வந்த நிலையில் முறைப்­பாட்­டாளர் தரப்பு, பிர­தி­வாதி தரப்பு, சாட்சி விசா­ர­ணை­களும் தொகுப்­பு­ரை­களும் நிறை­வ­டைந்­துள்ள நிலை­யி­லேயே தீர்ப்பு இன்று அறி­விக்­கப்­படவுள்­ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21