முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபையினை அசௌகரியப்படுத்த ஒருபோதும் இடமளிக்கோம் என்று புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் செ.பிறேமகாந் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு ஒலுமடுப்பகுதியில் கட்டப்பட்ட நூலக திறப்பு நிகழ்வில் நேற்றைய தினம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,
புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு ஒரு சொத்து வந்து சேர்ந்துள்ளது என்றுதான் நான் கூறுவேன். இந்த நூலகம் சனசமூக நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இது பிரதேச சபையின் சொத்து புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சனசமூக நிலையங்களின் செயற்பாடு மிகவும் குறைவாகக் காணப்படுகின்ற நிலையில், அனேகமான பிரதேசங்களில் கிராம அபிவிருத்தி சங்கங்கள்,மாதர் அபிவிருத்தி சங்கங்கள்தான் சிறப்பாக செயற்பட்டு வருகின்றன.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தினை பொறுப்பெடுத்ததன் பின்னர் சனசமூக நிலையங்களை மீளவும் புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட சனசமூக நிலையங்கள் பாரிய பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றன.
புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்குட்பட்ட சனசமூக நிலையங்கள் நூல்நிலையங்களை உருவாக்கி மக்கள் சேவையினை செய்து வருகின்றார்கள். அதற்கேற்ற வகையில் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உள்ள சனசமூக நிலையங்களும் மாற்றி அமைக்கப்படவேண்டும். சனசமூக நிலையங்கள் பதிவு செய்யப்பட்டால் ஆண்டு தோறும் பத்திரிகை செலவிற்காக பத்தாயிரம் ரூபா வழங்கப்படுகின்றது.
எனவே ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உள்ள சனசமூக நிலையங்கள் அனைத்தும் பதிவு செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுங்கள். ஒற்றுமை உடைய சமூகமாக நாங்கள் வளர்ந்து நிற்க வேண்டும். தற்போது புதுக்குடியிருப்பு பிரதேச சபை பற்றிய தகவல்கள் செய்திகளாக வெளிவந்து கொண்டிருக்கின்றது.
உண்மையில் பிரதேச சபையினை அபிவிருத்திக்காகவே பொறுப்பெடுத்துள்ளோம். அரசியல் வேலைக்கு நாங்கள் பொறுப்பெடுக்கவில்லை. சிலர் திட்டமிட்டவகையில் தங்களின் தனிப்பட்ட நோக்கங்களுக்காகவும் தங்களை பிரபல்யப்படுத்தவேண்டும் என்பதற்காகவும் பிரதே சபையினை அசௌகரியப்படுத்துகின்றார்கள்.
அவ்வாறான நடவடிக்கைகளுக்கு ஒருபோதும் நாங்கள் இடமளிக்கமாட்டோம். இது மக்களுக்கான சபை என்றும் மக்களுக்காக புதுக்குடியிருப்பு பிரதேச சபை சேர்ந்து இயங்கும். உங்கள் தேவைகளை கோரிக்கைகளாக முன்வையுங்கள் .அவை செய்து தரப்படும். என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM