இங்கிலாந்தின் சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் இரவுவிடுதியொன்றில் மோதலில் ஈடுபட்டமை தொடர்பான வழக்கு இன்று ஆரம்பமாகியுள்ளது.
இதன் போது அரசதரப்பு சட்டத்தரணிகள் பென்ஸ்டோக்ஸ் தற்பாதுகாப்பு என்ற எல்லையை மீறி செயற்பட்டார் என தெரிவித்துள்ளனர்.
பென்ஸ்டோக்ஸ் தன்னிலை இழந்து பழிவாங்கும் நோக்கில் தாக்க தொடங்கினார், எனதெரிவித்துள்ள சட்டத்தரணிகள் பென்ஸ்டோக்சும் அவருடன் இருந்தவர்களும் தாங்கள் தாக்கப்பட்டனர் என கருதியதை தொடர்ந்து இந்த வன்முறையில் ஈடுபட்டனர் என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பென்ஸ்டோக்ஸ் எம்பார்கோ இரவுவிடுதிக்குள் நுழைய முயன்ற வேளை இடம்பெற்ற மோதல்கள் தொடர்பிலேயே அவர் நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டுள்ளார். ஸ்டோக்சுடன் அவ்வேளை அலெக்ஸ் ஹேலும் காணப்பட்டார்.
குறிப்பிட்ட விடுதியின் வாயில்காவலாளி பென்ஸ்டோக்சை உள்ளே அனுமதிக்க மறுத்த வேளை ஸ்டோக்ஸ் சீற்றமடைந்து ஹோட்டலில் இருந்து வெளியே சென்று கொண்டிருந்த ஓரினச்சேர்க்கையாளர்கள் இருவரை தாக்கியுள்ளார் என அதிகாரிகள் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர்..
மேலும் பென்ஸ்டோக்ஸ் சிகரெட்டினால் ஒருவரை சுட்டார் எனவும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வன்முறைகள் எப்படி ஆரம்பித்தன என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கே தெரியும் எனினும் இந்த வன்முறையை இலகுவாக ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தியிருக்கலாம் என அரச தரப்பு சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
இந்த வழக்குகளில் ஆஜராக வேண்டும் என்பதால் இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்டிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM