(எம்.சி.நஜிமுதீன்)
எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட்டு எதிர்க் கட்சிக்கு வழங்கப்பட வேண்டும். இல்லையெல் பாராளுமன்றில் கடும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவோம் என கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
பத்தரமுல்லையில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் அதிகரிப்பதற்கு இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எனவே பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் ஒரே அளவிலான சம்பளம் வழங்கப்பட வேண்டும். அதில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என மாறுபட்ட சம்பளம் வழங்க முடியாது.
எனினும் ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளத்திற்கு மேலதிகமாக இன்னும் இரண்டு இலட்சம் கொடுப்பனவு வழங்கப்படுகிறது. இது குறித்து ஜனாதிபதி ஆராய வேண்டும்.
மேலும் எதிர்கட்சித் தலைமை குறித்து நாளை தீர்மானிப்பதகாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் எதிர்க்கட்சித் தலைமையை கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தனவுக்கு வழங்குமாறு நாம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM