(எம்.எம்.மின்ஹாஜ்)
நாட்டின் நல்லிணக்கம் வரலாற்று தொடக்கம் சீராக காணப்பட்டாலும் சுய இலாபத்திற்காக அரசியல்வாதிகள் தெரிவிக்கும் கருத்துகளின் விளைவாகவே இலங்கையில் நல்லிணக்கம் சீர்குலைவதற்கு பிரதான காரணமாகும் என மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, இந்து மத விவகாரம் மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
இன, மத சகவாழ்வின் ஊடாக நிலையான நாடு என்ற தொனிப்பொருளின் கீழ் விசேட மாநாடொன்று இன்று கண்டி மகாவலி ரீச் ஹோட்டலில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,
நாட்டின் நல்லிணக்கம் வரலாற்று தொடக்கம் சீராக காணப்பட்டாலும் சுய இலாபத்திற்காக அரசியல்வாதிகள் தெரிவிக்கும் கருத்துகளின் விளைவாகவே இலங்கையில் நல்லிணக்கம் சீர்குலைவதற்கு பிரதான காரணமாகும். ஆகவே இந்த சூழலை நாம் மாற்றி அமைக்க வேண்டும். இல்லையேல் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாமல் போகும்.
என்னுடைய ஒத்துழைப்பினால் இரு விகாரைகள் நிர்மாணிப்பதற்கு உதவி கரம் நீட்டியுள்ளேன். அதுபோன்று நாட்டில் வாழும் பெரும்பான்மையானோர் சகவாழ்வுடன் வாழ வேண்டும். மனிதர்கள் யாவரும் தர்மத்தை பின்பற்றி நடக்க வேண்டும். தர்மத்தை வழிதவறவிட்டு சென்றோமானால் நல்லிணக்கம் பாதிப்புறும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM