(ரவி கலைச்செல்வன்)
மினுவாங்கொடை யடியான சந்தியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் வயோதிபர் ஒருவர் பலியாகியுள்ள நிலையில் குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை மினுவாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கொலை. இரு தரப்பினரிடம் காணப்பட்டு வந்த பழைய தகராறு ஒன்றின் பலி தீர்க்கும் செயலே இது என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யடியான சந்தியில் நபர் ஒருவர் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 11.10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் வயோதிபர் ஒருவர் பலியாகியுள்ளார்.
மினுவாங்கொடையைச் சேர்ந்த 68 வயதுடைய விஜயமுனி ஜஸ்டின் ரத்னசிறி சில்வா என்பவரே இவ்வாறு பலியானவராவார்.
பட்டம் விடுதல் தொடர்பாக இரு தரப்பினரிடையே கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் திகதி ஏற்பட்ட தகராறில் மேற்கொள்ளப்பட்ட கத்தி குத்து தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் பலியாகியுள்ளனர்.
இது தொடர்பான வழக்கு மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வரும் நிலையில் சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டவர்களினாலேயே பலி தீர்க்கும் முகமாக இவ்வாறு துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்நலையில் குறித்த கொலை தொடர்பில் இரு சந்தேக நபர்களை மினுவாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த கொலைச்சம்பவத்தில் சந்தேக நபர்கள் இருவரை கைது செய்துள்ளதோடு அவர்கள் பயனித்த மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் கொலை தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM