மனித மாமிசத்தை உண்பதற்கு தடையில்லா 5 நாடுகள்

06 Aug, 2018 | 05:48 PM
image

உலகம் நாகரீகத்தை நோக்கி சென்றுகொண்டு இருக்கும் இந்த காலத்திலும் மனித மாமிசத்தை உண்பதற்கான தடையை விதிக்காத சில நாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன. அந்தவகையில், அவ்வாறு சில நாடுகளைப் பற்றி நோக்கினால்,

01- இந்தோனேசியா - கொரோவா

இந்தோனேசியாவில் தற்போது வாழந்துகொண்டிருக்கும் இறுதி பழங்குடியினரே  கொரோவா பழங்குடியினர். 

இவர்கள் மனித மாமிம்சம் உண்பதை திருவிழாவாகக் கொண்டாடி அதனை உண்பார்கள், இவர்கள் மனிதனுடைய முடி, நகம், பல் மற்றும் ஆண்  பெண் உறுப்புக்களை தவிர்ந்து மற்றையவைகளை விரும்பி உண்பார்கள். மேலும் மனித மாமிசத்தை சமைத்து வாழை இலையில் பரிமாறி உண்பது இவர்களுடைய வழக்கமாகும்.

02 - உகாண்டா 

உகாண்டாவில் மனித மாமிசத்திற்கு தடை கிடையாது, ஆனால் மனிதனை கொலை செய்வதற்கு தடைவிதித்துள்ளனர். உலகில் மனித மாமிசம் உண்பவர்களில் அதிகம் உகாண்டாவிலுள்ள காடுகளில் வாழும் பழங்குடியினரே  ஆகும். இவர்கள் இறந்த மனித உடல்களை சமைத்தும் உண்பார்கள்.

03 - கம்போடியா 

2002 ஆம் ஆண்டில் கம்போடியாவில் சுடுகாட்டிற்கு எரிக்க வந்த பிணத்தை வைனில் வேகவைத்து உண்டதற்காக இரண்டு நபர்களை பொலிஸார் கைது செய்தனர். இருப்பினும் கம்போடியாவில் மனித மாமிசத்தை உண்பதற்கு தடை விதிக்காததால் இரு வாரங்கள் கழித்து அவர்களை விடுதலை செய்தனர்.

04 -  இந்தியா - அகோரிகள் 

இந்தியா மற்றும் இதர நாடுகளில் வாழும் அகோரிகள் என்று அழைக்கப்படும்  ஆன்மீகவாதிகள் இறந்த பிணங்கள், சுடுகாட்டில் அரைகுறையாக எரிந்த பிணங்கள் என்பவற்றை உண்பார்கள், இந்திய சட்டத்தில் இவர்களுக்கு இவற்றிக்கான எவ்வித தடையும் கிடையாது. புனித இடமான காசியில் இவர்கள் அதிகமாக வாழ்வார்கள், உலகிலே மொத்தம் நூற்றுக்குட்பட்டோரே வாழ்கின்றனர், இவர்கள் மனித மண்டையோட்டில் உணவுகளை உண்பதும் நீரைப் பருகுவதும் இவர்களது தினசரி நடவடிக்கையாகும். 

05 - சீனா 

உலகிலே மிகவும் மோசமான மனித மாமிசம் உண்பவர்கள் இங்கே தான் உள்ளனர். பொதுவாக மனிதமாமிசம் உண்பவர்கள் இறந்த உடலைதான் உண்பார்கள். ஆனால் இங்கு மனித கருக்களை உண்கின்றனர். கரு கலைந்த சிசுக்களை சூப் வைத்து உண்பார்கள். சகிப்புத்தன்மை மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் பொருட்டு ஒரு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கைவிடப்பட்ட கருத்தரிப்புகளை உண்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right