ஐரோப்பிய ஒன்றியமானது தமிழீழ விடுதலைப் புலிகளை தீவிரவாத அமைப்பொன்றாக பட்டியல்படுத்துவதை மேலும் 6 மாதங்களால் நீடித்துள்ளது.
தீவிரவாத போராட்டம் தொடர்பான கண்ணோட்டத்தைக் கொண்டுள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக வழிநடத்தப்படும் குறிப்பிட்ட கட்டுப்பாடுகள் தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒழுங்கு விதிகளின் கீழேயே ஜூலை 30 ஆம் திகதியிலான இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளால் இலங்கைக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் உள்ளதை ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 நாடுகளையும் நாம் ஒருவாறு ஏற்றுக்கொள்ளச் செய்துள்ளோம் என பிரஸல்ஸ் நகரிலுள்ள இலங்கையின் தூதுவர் ரொடனி பெரேரா தெரிவித்தார்.
"பல வருடங்களுக்கு முற்பட்ட தெளிவாகப் புலப்படக்கூடிய சான்றுகளுடன் கூடிய புதுப்பிக்கப்பட்ட ஆவணங்களை நாம் வைத்திருக்க வேண்டிய கடினமான பணியாக அது இருந்தது" என அவர் கூறினார்.
தேவைப்படும் தகவல்களை தொகுக்கும் பணி சட்ட அமுலாக்கப் பிரிவாலும் கொழும்பிலுள்ள ஏனைய முகவர் நிலையங்களாலும் வெளிநாட்டு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. எனத் தெரிவித்த தூதுவர் பெரேரா, " அந்த வகையில் பிரஸல்ஸிலுள்ள தூதரகம் பிரஸல்ஸ் நகரில் ஒழுங்குமுறையில் கூடும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தீவிரவாதத்திற்கு எதிரான நிபுணர்களின் கண்ணோட்டங்களுக்கு அமைவான சரியான முறையை அதிகாரிகள் பின்பற்றுவதை உறுதிப்படுத்தியிருந்ததாகவும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடைகள் தொடர்ந்து பேணப்படுவதை உறுதிப்படுத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து 28 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடனும் ஒழுங்கு முறையில் தான் சந்திப்பை மேற்கொண்டதாகவும் கூறினார்.
ஐரோப்பிய சபை இந்த வருடம் மார்ச் 21 ஆம் திகதி விடுதலைப் புலிகளை முதல் தடவையாக தீவிரவாத பட்டியலில் மீள உள்வாங்கி தீவிரவாத கண்ணோட்டத்தைக் கொண்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக குறிப்பிட்ட கட்டுப்பாடுகளை தொடர்ந்து விதிக்க வழிநடத்தியிருந்தது.
நீண்ட கால இராஜதந்திர போராட்டமொன்றின் விளைவாக மீளப் பட்டியல்படுத்தப்பட்ட 20 அமைப்புகள் மத்தியில் விடுதலைப் புலிகளது பெயர் இடம்பிடித்துள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பு 2006 ஆம் ஆண்டில் தீவிரவாத இயக்கமாக முதன்முதலாக அடையாளப்படுத்தப்பட்டு இன்று வரை அவ்வாறே உள்ளது. இந்நிலையில் அந்தக் குழுவினர் மேற்படி ஆரம்ப பட்டியலுக்கு எதிராக சவால் விடுக்கும் நடவடிக்கை எதிலும் ஈடுபடவில்லை. ஆனால் பின்னர் அந்த அமைப்பு இந்த விவகாரத்தை ஐரோப்பிய பொது நீதிமன்றத்தின் முன்பாக கொண்டு சென்றது.
இந்நிலையில் 2014 ஆம் ஆண்டு ஐரோப்பிய பொது நீதிமன்றம் விடுதலைப் புலிகள் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை வலிதற்றதாக்கியிருந்தது. எனினும் அதனை எதிர்காலத்தில் விடுதலைப் புலிகளுக்கான நிதிகளை முடக்குவதை சாத்தியமாக்கும் வகையில் அது தொடர்பான மேன்முறையீடுகள் தொடர்பான முடிவுகள் வரை பேண அது தீர்மானித்திருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM