வெனிசூலா ஜனாதிபதி நிக்கொலஸ் மடுரோ டிரோன் வெடிகுண்டு தாக்குதலிலிருந்து உயிர் தப்பியுள்ளார்.
தலைநகர் கரகாசில் ஜனாதிபதி உரையாற்றிக்கொண்டிருந்தவேளை வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட டிரோன்களை பயன்படுத்தி தாக்குதல் இடம்பெற்றதாக வெனிசூலா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் ஜனாதிபதி பாதிப்பின்றி உயிர் தப்பியுள்ளார் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெனிசூலாவின் தொடர்பாடல் அமைச்சரும் ஜனாதிபதி இலக்கு வைக்கப்பட்டதை உறுதி செய்துள்ளதுடன் இதன் போது ஏழு படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி இராணுவநிகழ்வொன்றில் உரையாற்றிக்கொண்டிருப்பதையும் அவரும் அவரது அதிகாரிகளும் தீடீர் அதிர்ச்சியுடன் என மேலே பார்ப்பதையும் படைவீரர்கள் பதற்றத்துடன் ஒடுவதையும் வீடியோக்கள் காண்பித்துள்ளன.
வெனிசூலா இராணுவத்தின் 81 வருடத்தினை குறிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி உரையாற்றிக்கொண்டிருந்தவேளையே டிரோன் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
வெடிமருந்து நிரம்பிய இரு டிரோன்கள் ஜனாதிபதிக்கு அருகில் வெடித்துள்ளன.
நாட்டின் வலதுசாரி எதிர்கட்சியினரே இதற்கு காரணம் என அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM