பாகிஸ்தானில் அரசு ஹெலிகொப்டரை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பான வழக்கில் இம்ரான் கானை எதிர்வரும் 7ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தெக்ரிக்-இ -இன் சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் எதிர்வரும் 11ஆம் திகத அந்நாட்டின் பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.
இந்த நிலையில் அவர் மீது ஊழல் புகார் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் கைபர்- பக்துன்குவா மாகாணத்தில் இவரது பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சி ஆட்சி மேற்கொண்டது
அப்போது அவர் அரசுக்கு சொந்தமான ஹெலிகொப்டரை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மொத்தம் 72 மணி நேரம் உபயோகித்து இருப்பதாகவும் அதற்குரிய வாடகை கட்டணம் ரூ.2 கோடியே 17 லட்சம் செலுத்தவில்லை என்றும் ஊழல் புகார் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய பொறுப்புடமை நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த மாதம் (ஜூலை) 18 ஆம் திகதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு இம்ரான்கானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
தேர்தல் பணியில் இருந்ததால் அவர் ஆஜராகவில்லை. அவரது வக்கீல் ஆஜரானார். இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது எதிர்வரும் 7 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராக இம்ரான் கானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM