ரஷியாவைச் சேர்ந்த இரு ஹெலிகொப்டர்கள் சைபீரியாவில் ஒன்றோடொன்று மோதிக்கொண்டதில் ஒரு ஹெலிகொப்டர் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் பலியாகினர்.
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து சுமார் 4 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிரஸ்னோயார்ஸ்க் மாகாணத்தில் உள்ள துருகான்ஸ்க் மாவட்டத்தில் இருந்து இன்று இரு Mi-8 ரக ஹெலிகொப்டர்கள் புறப்பட்டன. ஒரு ஹெலிகொப்டரில் பெட்ரோல் கிணற்றில் பயன்படுத்தும் உபகரணங்கள் ஏற்றப்பட்டிருந்தன.
மற்றொரு ஹெலிகொப்டரில் அந்த எண்ணெய் கிணற்றில் வேலை செய்யும் 15 பணியாளர்கள் உள்ளிட்ட 18 பேர் சென்றனர் . அந்த ஹெலிகொப்டர் மேலே ஏற முயன்றபோது முன்னால் சென்ற ஹெலிகொப்டரில் ஏற்றப்பட்டு வெளியே நீட்டிகொண்டிருந்த இயந்திரத்தின் ஒருபகுதியின் மீது மோதி கீழே விழுந்தது.
விழுந்த ஹெலிகாப்டர் தீப்பிடித்து வெடித்து சிதறிய விபத்தில் அதில் இருந்த 18 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இன்னொரு ஹெலிகொப்டர் பத்திரமாக சென்று சேர்ந்ததாக தெரிய வந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM