தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகள் வவுனியா மாவட்ட செயலகத்தில் தீயிட்டு எரிக்கப்பட்டன.
வவுனியா மாவட்டத்தில் தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையினரால் கடந்த சில வாரங்களாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட தடை செய்யப்பட்ட தங்கூசி வலைகள் வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (04.08) காலை 10.00 மணியளவில் நீதிமன்ற உத்தரவிற்கமையாக வவுனியா மாவட்டங்களுக்கான மாவட்ட நீர் உயிரினச் செய்கை உத்தியோகத்தர் யோ. நிசாந்தன் அவர்களின் தலமையில் தீயிட்டு எரிக்கப்பட்டன.
மாமடு, வவுனியாகுளம் , பாவற்குளம் , மடுக்கந்தை போன்ற பிரதேசங்களிலிருந்து கைப்பற்றப்பட்ட சுமார் 15இலட்சம் பெறுமதியான வலைகளே இன்று தீயிட்டு கொழுத்தப்பட்டன. கடந்த சில வாரங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது 15 நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
நீதிமன்ற உத்தரவிற்கு அமைய வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சட்டவிரோத தங்கூசி வலைகள் தீயிட்டு எரிக்கும் சம்பவத்தில் வவுனியா மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் , வவுனியா மாவட்டங்களுக்கான மாவட்ட நீர் உயிரினச் செய்கை உத்தியோகத்தர்கள், மீனவர்கள் , மாவட்ட செயலகத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM