அவுஸ்திரேலியாவின் சிட்னியில் வலைபந்தாட்ட பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது கார் மோதியதில் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார்.
மிரான்டாவில் உள்ள பெலியங்கரா வலைபந்தாட்ட ஆடுகளத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என தெரிவித்துள்ள அதிகாரிகள் பெண்மணியொருவரே குறிப்பிட்ட காரை செலுத்தினார் இதன் காரணமாக ஏற்பட்ட விபத்தில் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார் என தெரிவித்துள்ளனர்
காரை பின்னோக்கி செலுத்திய வேளையே இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவித்துள்ள அதிகாரிகள் பல பார்வையாளர்களும் காயமடைந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது பெண்மணியொருவர் காரிற்கும் அரங்கின் தடுப்பு சுவரிற்கும் இடையில் சிக்கிக்கொண்டார்,அவரை பொதுமக்கள் மீட்டெடுத்தனர் அவர் ஆபத்தான நிலையில் உள்ளார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்னொரு நபரும் காரின் பின்பக்கத்தில் சிக்கிக்கொண்டார் அவரின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காரை செலுத்தியவர் பிரேக்கை பயன்படுத்துவதற்கு பதில் அக்சிலேட்டரை பயன்படுத்தியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அவ்வேளை பல சிறுவர்கள் வலைபந்தாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் அவர்கள் அதிஸ்டவசமாக உயிர் தப்பியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM