நெஞ்சிற்கும், வயிற்றிற்கும் இடையே உள்ள உதரவிதானம் என்ற பகுதியின் வழியாக எம்முடைய உடலில் இருக்கும் உணவுக்குழாய் செல்கிறது. நாம் உட்கொள்ளும் உணவு, இந்த உணவுக்குழாய் வழியாக பயணித்த பிறகு தான் இரைப்பைக்கு சென்றடைகிறது.
இந்த பகுதியில் உணவுகுழாயைச் சுற்றி நெகிழும் தன்மையுடைய சவ்வு படலம் ஒன்று இருக்கிறது. இதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் பாதிப்பு ஏற்படுகிறது. முதுமையின் காரணமாகவும், வேறு சில காரணங்களுக்காகவும் இந்த அமைப்பில் துளை போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். இதன் போது இந்த துளையின் வழியாக இரைப்பையின் மேற்பகுதி நெஞ்சிற்குள் நுழைந்துவிடும். இதைத்தான் ஹயாட்டல் ஹெர்னியா என்று மருத்துவத்துறை குறிப்பிடுகிறது.
உணவு உட்கொண்ட பின் நெஞ்செரிச்சல் ஏற்படும். ஏப்பம், குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகளும் ஏற்படும். ஒரு சிலருக்கு மாரடைப்பு ஏற்பட்டதைப் போல் நெஞ்சு வலிக்கும். இதற்கு கேஸ்ட்ரோ எண்டாஸ்கோப்பி என்ற பரிசோதைனையை செய்தால் பாதிப்பின் வீரியம், தன்மை போன்றவை துல்லியமாக தெரியவரும். ஒரு சிலருக்கு இதன் பாதிப்பு தீவிரமாக இருந்தால் லேப்ராஸ்கோப்பி என்ற சத்திர சிகிச்சை அவசியமாகும்.
இதனை தடுக்கவேண்டும் என்றால், தேவைக்கு ஏற்ற வகையில் பசியாறவேண்டும். சூடாக எதையும் உணவுஉட்கொள்ளவோ பருகவோ கூடாது. உணவுஉட்கொண்ட உடன் குனிந்து பணியாற்றக்கூடாது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM