(நா.தினுஷா)
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்த போராட்டம் முழுமையாக வெற்றியளித்துள்ளதாக தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர், இப் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதில் சாதாகமான வெளிப்பாட்டினை அரசாங்கம் முன்வைக்கவில்லை எனவும் தெரிவித்தனர்.
தேசியக் கொள்கையொன்று இல்லாமல் சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டமை உள்ளிட்ட 10 கோரிக்கைகளை முன்வைத்து அவற்றுக்கு தீர்வுப்பெற்று தருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி வந்தோம்.
ஆனால் எங்களின் கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு ஒருமாதம் கடந்தும் அரசாங்கம் சாதகமான முடிவுகளை இன்னும் முன்வைக்காதிருப்பது கவலையளிக்கிறது என தெரிவித்த அரச மருத்துவ சங்கத்தின் செயலாளர் ஹரி அளுத்கே தீர்வு கிடைக்காவிட்டால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அத்துடன் வைத்தியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தினால் நோயார்களுக்கு ஏற்ப்பட்ட பாதிப்பு தொடர்பான பொறுப்பினை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இன்று காலை 8 மணிமுதல் 24 மணிநேர வேலைநிறுத்த வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்தோம் எனவும் அச் சங்கத்தினர் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM