(இராஜதுரை ஹஷான்)
அனைத்து இன மக்களும் நல்லாட்சியின் பக்கமே உள்ளனர் எனவே போராட்டங்களின் ஊடாக தேசிய அரசாங்கத்தை கவிழ்க்க முடியும் என மஹிந்த ராஜபக்ஷ கனவில் கூட நினைக்க கூடாது என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,
போராட்டங்களின் ஊடாக ஜனநாயக முறையில் உருவாக்கிய தேசிய அரசாங்கத்தினை ஒரு போதும் வீழ்த்த முடியாது. 2015 ஆம் ஆண்டு இன மத வேறுப்பாடுகளை தாண்டி நல்லாட்சி அரசாங்கம் தோற்றுவிக்கப்பட்டது. இன்றுவரை தேசிய அரசாங்கம் ஜனநாயக முறையிலே செயற்படுகின்றது. கடந்த அரசாங்கத்தினை போன்று சர்வாதிகார ஆட்சியினை செயற்படுத்தவில்லை.
அரசாங்கத்திற்கு எதிராக நேற்றைய தினம் இடம்பெற்ற கூட்டத்தில் உதயன் கம்மன்பில, விமல் வீரவன்ச ஆகியோரது சகாக்கள் மாத்திரமே கலந்துகொண்டனர். இவர்கள் யார் எத்தன்மை கொண்டவர்கள் என்ற விடயத்தை சிறந்த அரசியல் கொள்கை கொண்ட மக்கள் நன்கு அறிவார்கள்.
அத்துடன் அரச வைத்திய சங்கத்தினர் அரசியல் நோக்கங்களுக்காக செயற்பட கூடாது புனிதமான வைத்திய சேவைக்கு மாத்திரமே அரசாங்கத்துடன் ஒன்றினைய வேண்டும் அரசியல் விடயங்களை மையப்படுத்தி பொது மக்களை துன்புறுத்துவது அவர்களின் சேவைக்க அவப் பெயரை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM