“சில அரசியல்வாதிகள் அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கும் கோசங்கள் காலாவதியானவை” 

Published By: Daya

03 Aug, 2018 | 12:28 PM
image

தற்போதைய அரசாங்கம் நாட்டை துண்டாடுவதற்கோ காட்டி கொடுப்பதற்கோ நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு பின்னரும் ஒருபோதும் அத்தகைய நடவடிக்கைகளுக்கு இடமளிக்கப்போவதில்லை என்று குறிப்பிட்ட ஜனாதிபதி , படையினரை சர்வதேச அழுத்தங்களிலிருந்து விடுவித்தது தற்போதைய அரசாங்கமேயாகும் என்றும் தெரிவித்தார். 

நாட்டைக் காட்டிக்கொடுக்க வேண்டாம் என்றும் இராணுவத்தினரை பாதுகாருங்கள் என்றும் கோரி காலாவதியான கோசங்களை கூறிக்கொண்டு சில அரசியல்வாதிகள் லிப்டன் சுற்று வட்டாரத்தில் இருந்து ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வது தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவேயாகும் என்றும் ஜனாதிபதி  தெரிவித்தார். 

நேற்று  பிற்பகல் மன்னம்பிட்டிய நகரில் ”ஹெலபொஜூன்” தேசிய உணவகத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 

அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்படுகின்ற எந்தவொரு கோசமும் இன்று செல்லுபடியானவை அல்ல என்றும், அன்று குறிப்பிடப்பட்ட மின்சாரக் கதிரை சர்வதேச யுத்த நீதிமன்றம், சர்வதேச நீதிபதிகளை கொண்டு வருதல் ஆகிய அனைத்து விடயங்களும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முற்றுப்பெற்று விட்டதாக ஜனாதிபதி தெரிவித்தார். 

2015ஆம் ஆண்டு ஜனவரி 08ஆம் திகதி இந்த நாட்டு மக்கள் முன்வைத்த பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுத்து வரலாற்று முக்கியத்துவமிக்க மாற்றத்தை தற்போதைய அரசாங்கம் நாட்டில் ஏற்படுத்தி இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

எழுச்சிபெறும் பொலன்னறுவை மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 180 திட்டங்களை மூன்று நாட்களில் மக்களிடம் கையளிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நேற்றைய தினம் சுமார் 60 திட்டங்கள் ஜனாதிபதி, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கல்விமான்களின் பங்குபற்றுதலுடன் மக்களிடம் கையளிக்கப்பட்டன. 

இதே நேரம் 134 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட வெலிக்கந்த சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கான அலுவலகம் நேற்று பிற்பகல் ஜனாதிபதியினால்  திறந்து வைக்கப்பட்டது.

எழுச்சிபெறும் பொலன்னறுவை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் விகாரைகளின் அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்களுக்கேற்ப சுமார் 4 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மன்னம்பிட்டிய மாகம்தொட்ட விகாரையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சமய போதனை மண்டபம், பிக்குகளுக்கான தங்குமிட வசதிகளைக்கொண்ட இரண்டுமாடி கட்டடம் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டன. 

132 மில்லியன் ரூபா செலவில் மன்னம்பிட்டி வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு மற்றும் சிகிச்சை கட்டடமும் நேற்று பிற்பகல் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டன. 

அரசியல் கட்சி பேதமின்றி மக்கள் பிரதிநிதிகளும் பெரும் எண்ணிக்கையான மக்களும் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தனர். 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18