பிலிப்பைன்ஸ் கடற்கரைக்கு அப்பால் கடலில் கைவிடப்பட்ட நிலையில் மிதந்த சொகுசுக் கப்பலொன்றிலிருந்து மர்மமான முறையில் இறந்து மம்மியாகிய நிலையில் காணப்பட்ட ஜேர்மனிய பிரஜையொருவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
துணிகர செயற்பாடுகளில் ஈடுபடுவதில் ஆர்வம் உள்ளவரான மான்பிரெட் பிறிட்ஸ் பஜோரத்தின் (59 வயது) என்ற மேற்படி நபரின் சடலம் இரு மீனவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நீரில் பெரும் பகுதி மூழ்கியிருந்த அந்தக் கப்பலின் அறையில் புகைப்படத் தொகுப்பொன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 2010 ஆம் ஆண்டு மே 2 ஆம் திகதி புற்றுநோயால் மரணமான தனது மனைவி கிளாடியாவுக்கு (53 வயது) அஞ்சலி செலுத்தும் வகையில் பிறிட்ஸ் எழுதியிருந்த 32 சொற்களைக் கொண்ட இரங்கல் குறிப்பொன்றும் அங்கு காணப்பட்டது.
“ 30 வருடங்களாக நாம் ஒரே பாதையில் பயணித்துள்ளோம். ஆனால் வாழ்வதற்கான எமது விருப்பத்தை விடவும் அரக்கர்களின் பலம் அதிகமாக இருந்ததால் நீ சென்று விட்டாய். உனது ஆன்மா அமைதி அடை யட்டும்" என அந்த இரங்கல் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர், தன்னுடன் சொகுசுக் கப்பலில் உலக சுற்றுப் பயணத்தை மேற்கொண்ட தனது மனைவியிடமிருந்து 2008 ஆண்டு பிரிந்திருந்தார்
பிறிட்ஸின் உடலுக்கு அருகில் வானொலித் தொடர்பாடல் தொலைபேசியொன்று காணப்பட்டது.
வறட்சியான உப்புத் தன்மையான சமுத்திரக் காற்று, மிகவும் வெப்பமான காலநிலை என்பவற்றால் அவரது உடல் மம்மி நிலையில் உருக்குலையாது பேணப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
அவர் எப்போது, எதனால் உயிரிழந்தார் என்பது அறியப்படவில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM