இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையின் பிரகாரம் பலாலி விமான நிலையத்திலிருந்து விமான சேவையை முன்னெடுக்க முடியுமான சில இந்திய விமான சேவை நிறுவனங்கள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம் என்று இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரன்ஜித் சந்து தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற பீம்ஸ் டெக் கூட்டுறவு மாநாட்டு அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்;
இந்த பீம்ஸ் டெக் அமைப்பின் முக்கிய நோக்கமாக மக்களுக்கிடையிலான தொடர்பே காணப்படுகின்றது. இலங்கையுடன் எமக்கு பாரிய தொடர்புகள் உள்ளன. சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனமானது இந்தியாவின் 14 நகரங்களுக்கு தனது சேவையை மேற்கொள்கின்றது. அதேபோன்று இந்தியா இலங்கையின் உட்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் பங்காளராக இருக்கிறது.
இலங்கையின் ரயில்வே பாதைகளை மேம்படுத்தும் நோக்கில் 1.3 பில்லியன் டொலர்கள் உதவி வழங்கியுள்ளது. கொழும்பு துறைமுகத்தின் 70 வீதமான மாற்றீடுகளுடன் இந்தியா தொடர்புபட்டுள்ளது. காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைக்க இந்தியா கடனுதவி வழங்கியுள்ளது. அது எதிர்காலத்தில் சிறந்த வர்த்தக துறைமுகமாக இருக்கும். இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையின் பிரகாரம் பலாலி விமான நிலையத்திலிருந்து விமான
சேவையை முன்னெடுக்கும் நோக்கில் சில இந்திய விமான சேவை நிறுவனங்களுடன் கலந்துரையாட எதிர்பார்க்கின்றோம்.
கடந்த 2000 ஆம் ஆண்டு இலங்கையும் இந்தியாவும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை செய்து கொண்டது. அது இரண்டு நாடுகளுக்குமே முதல் அனுபவமாக இருந்தது. அதன் பின்னர் இரண்டு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக தொடர்பு 8 மடங்கு அதிகரித்தது. அந்த வர்த்தக உடன்படிக்கையை மேலும் விரிவுபடுத்த நாம் எதிர்பார்க்கின்றோம். இலங்கையில் என்ன நடந்தாலும் முதலாவதாக ஈடுபடும் நாடாக இந்தியா இருக்கிறது. கடந்த வருடம் இலங்கையில் வெள்ளம் ஏற்பட்ட போது சில மணிநேரங்களில் இந்திய கப்பல்கள் இலங்கையை வந்தடைந்தன. அதேபோன்று வரட்சியின் போதும் எமது நிலைப்பாடு அவ்வாறே இருந்தது. இரண்டு நாடுகளுக்குமிடையிலான பங் காண்மையின் பெறுமதி மூன்று பில்லியன் டொலர்களாகும் அதில் 500 பில்லியன் டொலர்கள் உதவியாகும். இலங்கையின் முக்கியத்துவத்திற்கு ஏற்பவே நாங்கள் உதவிகளை வழங்குகின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM