(எம்.எம்.மின்ஹாஜ்)
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை சனிக்கிழமை மீண்டும் வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்போது யாழ். பல்கலைகழகத்தின் புதிய கட்டடத்தை திறந்து வைக்கவுள்ளார்.
'சுவசெரிய' அம்பியுலன்ஸ் சேவை, கம்பெரலிய வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கும் நோக்கில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த மாதம் வடக்கிற்கு விஜயம் செய்திருந்தார். இதன்படி இரு நாட்கள் அங்கு தங்கியிருந்து அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைத்திருந்தார். இதன்போது யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைதீவு ஆகிய பகுதிகளுக்கு சென்றிருந்தார்.
வடக்கு விஜயத்தை அடுத்து கிழக்கு மாகாணத்திற்கும் விஜயம் செய்து பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மக்கள் மயப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில் நாளைமறுதினம் சனிக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்போது யாழ். பல்கலைகழகத்தின் புதிய கட்டட திறப்பு விழாவில் கலந்து கொள்ளவுள்ளார். இந்நிகழ்வு கிளிநொச்சி, அறிவியல் நகரில் காலை 10.45 மணிக்கு நடைபெற்றவுள்ளமை குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM