இம்ரான்கானின் பதவியேற்பு நிகழ்விற்கு வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்புவிடுக்க இம்ரான் கான் முன்பு திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது குறித்த முடிவை கைவிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் பாகிஸ்தானில் தேர்தல் இடம்பெற்றது. இதில் பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் தலைமையிலான பிடிஐ கட்சி, அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
இதனையடுத்து மற்ற கட்சிகளின் உதவியுடன் ஆட்சியமைக்க இம்ரான் கான் முடிவு செய்துள்ள நிலையில் இம் மாதம் 11 ஆம் திகதி பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. பதவியேற்பு விழாவுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் அழைக்க இம்ரான் கான் முடிவு செய்திருந்தார்.
சார்க் நாடுகளின் தலைவர்களையும், பிரதமர் மோடியையும் பதவியேற்பு விழாவுக்கு அழைக்க அவர் விரும்பினார். எனினும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் அனுமதி தேவை என்பதால் அதுதொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. வெளிநாட்டு தலைவர்கள் வருகைக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல் அளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பதவியேற்பு விழாவை உள்ளூர் தலைவர்களை மற்றும் அழைத்து எளிமையாக நடத்த பிடிஐ கட்சி முடிவு செய்துள்ளது.
இம்ரான் கான், இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களான சுனில் கவாஸ்கர், கபில்தேவ், நவஜோத்சிங் சித்து, இந்தி நடிகர் அமீர்கான் ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளார். இம்ரான் கான் விடுத்த அழைப்பை, சித்து ஏற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM