"சபாநாயகருக்கு எதிராக பிரேரணை முன்வைத்தால் முகங்கொடுக்க தயார்"

Published By: Vishnu

02 Aug, 2018 | 03:34 PM
image

(எம்.எம்.மின்ஹாஜ்)

சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கூட்டு எதிரணி கொண்டு வந்தால், அந்த பிரேரணைக்கு முகங்கொடுப்பதற்கு நாம் தயாராக உள்ளோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் அமைச்சருமான ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எதிர்க்கட்சி தலைவர் பதவிக்காக சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வர பார்க்கின்றனர். எதிர்க்கட்சி தலைவர் பதவியை கூட்டு எதிர்க்கட்சி கோரட்டும். அதில் எமக்கு பிரச்சினையில்லை. எனினும் ஏற்கனவே எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் உள்ளார். அதில் எந்தவொரு மாற்றமும் வராது.

ஒரே கட்சியை சேர்ந்தவர்கள் ஆளும் கட்சியிலும் எதிர்க்கட்சியிலும் உள்ளனர். இவ்வாறான நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு எப்படி எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்குவது.

மேலும் எக்காரணம் கொண்டும் கருஜயசூரியவை சபாநாயகர் பதவியிலிருந்து நீக்குவதற்கு இடமளிக்கமாட்டோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02