இந்தியாவின், கேரளாவில் இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே வண்ணபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் கிருஷ்ணன்(52) – சுசிலா (50) தம்பதியினர்.
இவர்களுக்கு ஆர்சா (21) என்ற மகளும், அர்ஜுன் (18) என்ற மகனும் உள்ளனர்.
கடந்த 4 நாட்களாக குடும்பத்தில் இருந்து யாரும் வெளி நடமாட்டமற்று இருந்ததால், அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து விரைந்து வந்த பொலிஸார் வீட்டினை திறந்து பார்த்து பொழுது, வீட்டுச்சுவர்கள் மற்றும் பால்கனி பகுதிகளில் இரத்தக்கறை இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பின்னர் தீவிரமாக செயல்பட்ட பொலிஸார் தோட்ட பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையின் போது, ஒரு குறிப்பிட்ட இடத்தில் குவிக்கப்பட்டிருந்த மணல் மேடு மீது ஈக்கள் மொய்ப்பதை பார்த்து சந்தேகித்து அப்பகுதியை தோண்டுமாறு உத்தரவிட்டுள்ளனர்
இதனையடுத்து உள்ளூர் மக்களின் உதவியுடன், அப்பகுதியை தோண்டும்பொழுது, 4 பேரின் உடல்களும் ஒருவர் மேல் ஒருவராக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
உடனடியாக அவர்களின் உடல்களை மீட்டு ஆய்வு மேற்கொண்ட போலீசார், சம்பவத்தில் கிருஷ்ணனின் முகம் முழுவதுமாக சேதப்படுத்தப்பட்டுள்ளதும், அவரது மனைவியின் மார்பு பகுதியில் சேதப்படுத்தப்பட்டிருப்பதையும் கண்டறிந்தனர்.
அதே சமயம் அவரது பிள்ளைகள் இருவரினதும், உடல் முழுவதும் பலத்த காயங்கள் இருப்பதையும் கண்டறிந்தனர்.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் அக்கம்பக்கத்தினர் பலரிடமும் விசாரணை மேற்கொண்டதில், கிருஷ்ணனுக்கு பில்லி, சூனியம் போன்றவற்றில் அதிக நம்பிக்கை இருப்பதால் அவருடைய வீட்டிற்கு அடிக்கடி இரவு நேரங்களில் பலரும் வந்து செல்வதாக தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் கொலை செய்யப்பட்டிருந்த இடத்தில் இரும்புக்கம்பி உள்ளிட்ட ஆயுதங்கள் கண்டறியப்பட்டதால் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் சேர்ந்து இந்த கொலையை நிகழ்த்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM