எதிர்வரும் மாகாண சபைதேர்தல் எந்த முறையின் கீழ் நடைபெறவேண்டும் என்பது குறித்து தீர்மானிப்பதற்காக கட்சி தலைவர்கள் மத்தியில் நேற்று இடம்பெற்ற சந்திப்பு முடிவுகள் எதுவும் எட்டப்படாத நிலையில் முடிவடைந்துள்ளது.
பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவின் தலைமையின் கீழ் அலரிமாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் ஜே.வி.பி மற்றும் பொது எதிரணியின் தலைவர்கள் கலந்துகொள்ளாதது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை தவிர ஏனைய அனைத்து கட்சிகளும் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையின் கீழ் தேர்தலை நடத்துவதற்கு சம்மதம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் மனோகணேசன் ஜனவரி 5 ஆம் திகதி முதல் 10 திகதி வரையான காலப்பகுதியில் தேர்தல் நடைபெறலாம் என குறிப்பிட்டுள்ளார்.
கட்சி தலைவர்கள் மத்தியில் இடம்பெறவுள்ள அடுத்த சந்திப்பில் இது குறித்த இணக்கப்பாடு எட்டப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
இது அரசாங்கத்தினது பிரச்சினையில்லை மாறாக இது தேசிய பிரச்சினை இதன் காரணமாக அனைத்து கட்சிகளும் இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM