யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் வாள்வெட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களை கட்டுப்படுத்த விசேட மோட்டார் சைக்கிள் படையணி களமிறக்கப்பட்டுள்ளதாக யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
யாழ்.குடாநாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் வாள்வெட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், யாழ்ப்பாணம், கோப்பாய், மானிப்பாய், சுன்னாகம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் விசேட ரோந்து நடவடிக்கைகளுக்காக, சுமார் 10 மோட்டார் சைக்கிள்கள் அடங்கிய விசேட பொலிஸ் அணியொன்று களமிறக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 100 இற்கும் அதிகமான சிவில் உடை தரித்த பொலிஸார் களமிறக்கப்பட்டுள்ளதாகவும், ஓரிரு வாரங்களுக்குள் குறித்த குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் பொலிஸாரின் செயற்பாட்டுக்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் வாள்வெட்டுக் கும்பல்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர்கள் பொலிஸாரிற்கு தகவல்களை வழங்குவதன் மூலம் விரைவில் அவர்களை கைதுசெய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக நேற்று முன்தினம் கிராம அலுவலர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடந்ததாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், எனினும் குறித்த கிராம சேவையாளர் அலுவலகம் இயங்கும் வாடகை வீட்டில் முன்னர் வாள்வெட்டுக்குழுக்களுடன் தொடர்புடைய ஒருவர் வசித்து வந்ததாகவும், அவர் மீது தாக்குதல் நடத்தவே வந்த குழுவினர் கிராம சேவையாளரின் அலுவலகத்தை சேதப்படுத்தியதுடன், அவரையும் அச்சுறுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் உரிய தடயங்கள் கிடைக்கப்பெற்றுள்ளமையால், விரைவில் அவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM