இலங்கையில் இந்திய சீன யுத்தம் நடைபெறுகிறது; மனோகணேசன்

Published By: Digital Desk 4

01 Aug, 2018 | 04:36 PM
image

இலங்கையில் வீடுகளை அமைத்துக்கொடுக்கும் விடயத்தில் இந்திய சீன யுத்தம் நடைபெறுகிறது என தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் அமைச்சின் வடக்கு மாகாண அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

வடக்கு கிழக்கில் வீடுகளை  அமைத்துக்கொடுக்கும் பணியில் மூன்று வருடங்களை கடத்திவிட்டோம். ஒன்றரை இலட்சம் வரையான வீடுகள்  தேவையாக இருந்தது. இதில் நாற்பத்தையாயிரம் வரையான வீடுகளை இந்திய அரசாங்கம் அமைத்துக்கொடுத்துள்ளது, இன்னும் சில வீடுகளை அரசசார்பற்ற நிறுவனங்களும்,  அமைச்சர் சஜித் பிறேமதாச  அவர்கள் கிராமங்களை தெரிவு செய்து அவரும் வீட்டுத்திட்டங்களை அமைத்து கொடுத்துள்ளார்  அத்தோடு சில வீடுகளை இராணுவத்தினரும் அமைத்துக்கொடுத்துள்ளனர்.

அதேவேளை  ஒரு இலட்சம் வீடுகளை கட்டவேண்டும் என்று எமது சக அமைச்சர் சுவாமிநாதனுக்கு அந்தப் பொறுப்பு வழங்ப்பட்டு அவர் மூன்று வருடங்களாக கட்டிக்கொண்டிருக்கின்றார், ஆனால் இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை. 

ஆரம்பத்தில் பொருத்து வீடுகள் வந்தன பொருத்து வீடுகள் வடக்கு கிழக்கில் பொருந்தாது என்று வடக்கு கிழக்கு மக்கள் பிரதிநிதிகள் சொன்னார்கள் நானும் எதிர்த்தேன்  அதனால் அது வரவில்லை

ஆனால் இப்பொழுது இலங்கையில் இந்தியாவா சீனாவா என்று இந்திய சீன யுத்தம்  வீட்டுப் பிரச்சினையில் நடந்துகொண்டிருக்கிறது ஆனாலும் சீனா அமைத்துக்கொடுக்கப் போகும் வீடுகள்  என்று சொல்லப்படுகின்ற அந்த  வீடுகளும் பொருத்து வீடுகள் என்றே நினைக்கிறேன்.  எனத் தெரிவித்த அமைச்சர்  எனது அமைச்சுக்கும் 50 வீடுகளை அமைத்துக்கொடுக்கும் பொறுப்பை ஜனாதிபதி வழங்கியிருகின்றார் எனவும் தெரிவித்தார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50