இரு கருப்பைகளைக் கொண்ட பெண்ணொருவர் ஒரே சமயத்தில் அந்த இரு கருப்பைகளிலும் கருத்தரித்து இரு குழந்தைகளைப் பிரசவித்த அதிசய சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு பெண்ணொருவர் இரு கருப்பைகளிலும் ஒரே சமயத்தில் கருத்தரித்து குழந்தைகளைப் பிரசவிப்பது 500 மில்லியனுக்கு ஒரு பிரசவம் என்ற ரீதியில் இடம்பெறும் அபூர்வ நிகழ்வாகும்.
கோர்வோல் பிராந்தியத்தைச் சேர்ந்த ஜெனிவர் அஷ்வூட் (31 வயது) என்ற பெண்ணே இவ்வாறு கருத்தரித்து ஒரே சமயத்தில் குழந்தைகளைப் பிரசவித்துள்ளார்.
அவர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் தான் கருத்தரித்திருப்பதை அறிந்து மருத்துவ பரிசோதனைக்குச் சென்றபோது அவருக்கு இரு கருப்பைகள் இருப்பதையும் அந்தக் கருப்பைகள் ஒவ்வொன்றிலும் தலா ஒரு குழந்தை வீதம் இரு குழந்தைகளை அவர் கருத்தரித்திருப்பதையும் கண்டறிந்து மருத்துவர்கள் திகைப்படைந்தனர்.
ஜெனிவருக்கு ஏற்கனவே 8 வயதில் மில்லி என்ற மகள் உள்ளார். ஆனால் அவர் மில்லியை தனக்கு இரு கருப்பைகள் இருப்பதை அறியாத நிலையிலேயே கருத்தரித்து பிரசவித்திருந்தார்.
இந்நிலையில் ஜெனிவர் தற்போது இரு கருப்பைகளிலும் கருத்தரித்து ஆரோக்கியமான ஆண் குழந்தையொன்றையும் பெண் குழந்தையொன்றையும் அறுவைச் சிகிச்சை மூலம் பிரசவித்துள்ளார்.
ஆண் குழந்தைக்கு பிறையன் எனவும் பெண் குழந்தைக்கு பொப்பி எனவும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM