இந்தியாவின் இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 5,600 வெடிக்க வைக்கும் கருவிகளை (டெட்டனேட்டர்) இராமேஸ்வரம் பொலிஸார் மீட்டுள்ளதோடு ஆறு பேரை கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம், ஏர்வாடி, பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இலங்கைக்கு தங்கம், போதைப்பொருட்கள் கடத்தப்படுவது அடிக்கடி இடம்பெற்று வருகின்றது. வருகிறது.
இந்த நிலையில் இராமேஸ்வரம் அருகில் உள்ள சேராங்கோட்டைகடற்கரை பகுதியில் நேற்றிரவு கடலோர பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது அங்கு 6 பேர் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தனர். பொலிஸாரை கண்டவுடன் அவர்கள் அங்கிருந்து தப்ப முயன்றனர்.
இதன்போது பொலிஸார் குறித்த 6 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்ததையடுத்து சந்தேகம் அடைந்த பொலிஸார் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ய பயன்படுத்தும் 5,600 டெட்டனேட்டர்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனை இலங்கைக்கு கடத்த முயன்றதாக 6 பேரும் தெரிவித்தனர்.
இதையடுத்து பொலிஸார் அவர்களை இராமேஸ்வரம் போலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட 6 பேரும் இராமேஸ்வரம் மண்டபத்தைச் சேர்ந்த முகமது முஸ்ஸம் பில், பச்சம்மாள், சுப்பிரமணியன், ரவி, நம்பு, செல்வம் என தெரியவந்தது.
மேலும் குறித்த கடத்தல் தொடர்பான மேலதிக விசாரணைகளை இராமேஸ்வரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM