புதிதாக 10 பேருக்கு கிழக்கு மாகாண சபையினால் நிரந்தர நியமனம் வழங்கியமையினை எதிர்த்து கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் இன்று கல்முனை மாநகர சபைக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் மாநகர சபை அலுவலகத்தை திறக்க விடாமலும் தடுத்து வைத்திருந்தனர்.
கல்முனை மாநகர சபையில் தற்காலிக அடிப்படையிலான ஊழியர்கள் 102 பேர் இருக்கும் நிலையில் நிரந்தரமாக்காமல் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டதாலேயே குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தைத் தாம் நடத்தியதாக தெரிவித்தனர்.
'கிழக்கு மாகாண சபையின் முதல் அமைச்சின் செயலாளரே 6,7 வருடங்களாக சிற்றூழியர்களாக பணிபுரிந்து வருகிறோம் எங்களைப் புறக்கணித்து புதிதாக வருபவர்களுக்கு நியமனம் வழங்காதே"
'அரசியல்வாதிகளின் நாடக நியமனத்தை நிறுத்தி எங்களுக்கு நியமனத்தை வழங்கு"
'கிழக்கு மாகாண ஆளுநரே மாநகர சபையின் நிரந்தரமற்ற ஊழியர்களின் ஜீவனோபாய நடவடிக்கைளில் கை வைக்காதே"
'எஸ்.ஓ.ஆர். சட்டத்தை மீறிய ஆட்சேர்ப்பை உடன் நிறுத்து"
'நல்லாட்சி அரசாங்கம் எங்களுக்கு நல்லது செய்யும் என நினைத்தோம் ஆனால் எங்களை நடு வீதியில் கொண்டு வந்து விட்டது"
போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் மாநகர சபை அலுவலகத்தை திறக்க விடாமல் தடுத்தனர் இதனால் மாநகர சபை அலுவலகம் திறக்கப்படவில்லை கடமைக்கு வந்த ஊழியர்கள் அலுவலகத்திற்கு வெளியே நின்றனர்.
இதேவளை கல்முனை மாநகர சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவதால் திண்மக் கழிவகற்றல் நடவடிக்கைகள் சீராக இடம்பெறவில்லை இதன் காரணமாக பல பிரதேசங்களில் குப்பைகள் அகற்றப்படாமல் வீதியோரங்களில் தேங்கிக் கிடப்பதுடன் துர்நாற்றமும் வீசி வருகின்றது.
தங்களது கோரிக்கைக்கு நியாயமான தீர்வு கிடைக்கப்பெறாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் போராட்டத்தில் கலந்துகொண்ட அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்தார்.
குறித்த விவகாரம் தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநருக்கு மகஜர் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கல்முனை மாநகர சபை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களான சாமுவேல் சந்திரசேகரம் பொன். செல்வநாயகம் எஸ். குபேரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM