16 பேர் தொடர்பான இறுதி தீர்மானம் நாளை மறுதினம்

Published By: Vishnu

31 Jul, 2018 | 04:04 PM
image

(எம்.மனோசித்ரா)

அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான உறுதியான தீர்மானமொன்று நாளை மறுதினம் வியாழக்கிழமை நடைபெறவுள்ள கட்சி மறுசீரமைப்பு குழுக் கூட்டத்தின்போது எடுக்கவிருப்பதாக பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 பேரில் சிலர் பாராளுமன்றத்தில் எதிரணி தரப்பில் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களாக இருக்கின்றார்கள். 

சுதந்திர கட்சி அரசாங்கத்திலிருந்து விலகவில்லை இவர்கள் அரசாங்கத்திலிருந்து விலகிய பிறகும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களாகவே செயற்படுவதென்பது அனுமதிக்கப்பட முடியாதது. அதனால் அவர்களின் நிலை குறித்து திட்டவட்டமான நிலைப்பாடொன்றை எடுக்க வேண்டியிருக்கின்றது.

ஆகையால் நாளை மறுதினம் சுதந்திரக் கட்சியின் கொழும்பு தலைமையகத்தில் நடைபெறவுள்ள கட்சி மறுசீரமைப்பு கூட்டத்தின் போது இவர்கள் தொடர்பான இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47