வியட்னாமில் பஸ் ஒன்றும், சரக்கு லொறியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தனது திருமணத்துக்கு குடும்பத்துடன் சென்ற மணமகன் உட்பட 13 பேர் பலியாகியுள்ளனர்.
வியட்னாம் நாட்டின் காங்க் ட்ரி மாகாணத்தில் இருந்து திருமணத்துக்காக மணமகனின் குடும்பத்தினர் உட்பட 17 பேர் பஸ் ஒன்றில் பின்ஹ் டின்ஹ் மாகாணத்துக்கு சென்று கொண்டிருந்தனர். அதன் போது எதிரே வந்த சரக்கு லொறியும் பஸ் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் பஸ்ஸில் பயணித்த 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதோடு தகவல் அறிந்து சென்ற பொலிஸார் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். இந்நிவையில் மணமகன் உட்பட மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், படுகாயங்களுடன் 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சிறுகாயங்களுடன் தப்பிய லொறி சாரதியை கைது செய்துள்ள பொலிஸார் விபத்து குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தனது திருமண விழாவுக்கு செல்லும் வழியில் மணமகனும் அவரது குடும்பத்தாரும் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM