கொக்குவில் பகுதியில் இலக்கத் தகடுகள் துணியால் மறைத்துக் கட்டப்பட்ட நிலையில் வீதியில் கைவிடப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை நேற்று யாழ். பொலிஸார் மீட்டுள்ளனர்.
கொக்குவில் ஞான பண்டிதா பாடசாலைக்கு அண்மையில் வீடொன்றுக்குள் புகுந்த 8 பேர் கொண்ட கும்பல், அங்கு ஹஏஸ் வாகனத்துக்கு தீவைத்துவிட்டு அங்கிருந்த பொருள்களைச் சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றுவிட்டதாக தெரியவந்துள்ளது.
குறித்த வன்முறையை அரங்கேற்றிவிட்டுத் தப்பித்த கும்பலின் மோட்டார் சைக்கிளாக இது இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
வீதியில் விபத்து ஏற்பட்டதும் மோட்டார் சைக்கிளை கைவிட்டுத் தப்பித்திருக்கலாம் என்ற அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM