மன்னாரில் இடம்பெற்று வரும் அகழ்வுப் பணிகளின் போது தாய் ஒருவரின் எச்சமும் அவர் அருகே பச்சிளம் குழந்தை ஒன்றின் எச்சமும் மீட்கப்பட்டுள்ளன.
மன்னார் சதொச விற்பனை நிலைய வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்களைத் தொடர்ந்து நேற்று திங்கட்கிழமை 43 ஆவது நாளாகவும் அகழ்வுகள் இடம்பெற்றன.
இந்த அகழ்வின் போது சந்தேகத்திற்கிடமான ஒரு முதிர்ந்த மனித எச்சமும் அதன் அருகே சிறிய எலும்புகளை கொண்ட மனித எச்சமும் காணப்பட்டதைத் தொடர்ந்து குறித்த இரு மனித எச்சங்களையும் சூழ்ந்திருந்த மண்ணை அகற்றிய போது, அருகருகே புதைக்கப்பட்டிருந்த தாயும் பிள்ளையும் என சந்தேகிக்கப்படும் வகையில் மனித எச்சங்கள் தென்பட்டன.
மீட்கப்பட்ட இரு மனித எலும்புக்கூடுகள் குறித்து துல்லியமான கருத்துக்களை கூற முடியாது எனவும் முழுமையான பரிசோதனைகளின் பின்னரே கருத்துக்கள் தெரிவிக்க முடியும் எனவும் அகழ்வில் ஈடுபட்டுள்ள நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுவரை மீட்கப்பட்டுள்ள மனித எச்சங்களை உடற்கூற்று பரிசோதனைக்காக அமெரிக்காவில் உள்ள புளோ ரிடாவுக்கு அனுப்பி வைப்பதற்கான பரிந்துரையை நீதிமன்றத்துக்கு முன் வைத்துள்ளதாகவும், இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட எந்த முடிவுகளும் எடுக்கப் படவில்லை எனவும் தெரிவித்தனர்.
தற்போது வரை மனித புதைகுழியிலிருந்து 60 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பி டத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM