யாழில் கிராமசேவகருக்கு வாள் முனையில் அச்சுறுத்தல்

Published By: Vishnu

31 Jul, 2018 | 08:24 AM
image

(எம்.நியூட்டன்)

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை கிழக்கு கிராமசேவகர் வாள் முனையில் அச்சுறுத்தப்பட்டதுடன், அவரது அலுவலகம் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. வாள்கள் கம்பிகளுடன் நேற்று பட்டப்பகலில் நுழைந்த 8 பேர் கொண்ட கும்பல் இந்த அட்டூழியத்தை அரங்­கேற்றி தப்­பிச்­சென்­றது. 

இச் சம்வமானது வண்­ணார்­பண்ணை கிழக்கு ஜே 100 கிராம அலு­வ­ல­கரின் அலு­வ­ல­கத்தில் நேற்று  நண்­பகல் 12.20 மணி­ய­ளவில் இந்த அடா­வடிச் சம்­பவம் இடம்­பெற்­றது.

அலு­வ­ல­கத்­துக்குள் புகுந்த கும்பல், கிராம அலு­வ­ல­கரின் கழுத்தில் வாளை வைத்து அச்­சு­றுத்­தி­ய­துடன்  அலு­வ­ல­கத்­தி­லி­ருந்த மடி­க்க­ணணி, கைத்தொ­லை­பேசி  என்­ப­ன­வற்றை அடித்து உடைத்து சேதப்­ப­டுத்­தி­யுள்­ளது. 

மேலும் அலு­வ­ல­கத்­துக்கு முன்­பாக நின்ற முச்­சக்­கர வண்டி, மோட்டார் சைக்கிள் மற்றும்  பெறு­ம­தி­யான பொருள்­களை அடித்து சேதப்­ப­டுத்­திய கும்பல், அங்­கி­ருந்து தப்பிச் சென்­றுள்­ளது.

சம்­பவம் தொடர்பில் அறி­விக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து பொலிஸார் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர்.

இதேவேளை கொக்குவில் வீடு ஒன்றுக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் அங்கு வீட்டில் தரித்திருந்த வாகனத்தினை அடித்து நொறுக்கி தீ வைத்ததுடன் வீட்டில் உள்ள பெறுமதியான உபகரணங்களை அடித்து நொறுக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளது. கொக்குவில் ஞான பண்டிதா பாடசாலைக்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றிலேயே இந்தச் சம்பவம் நேற்று நண்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சுமார் 8 பேர் கொண்ட குழு குறித்த வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த வாகனத்தின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதுடன் வீட்டின் ஜன்னல்கள் பெறுமதியான உபகரணங்க ளையும் அடித்து நொறுக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளது. இச் சம்பவம் குறித்தும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38