(எம்.எம்.மின்ஹாஜ்)
மொட்டு சின்னத்தின் வேட்பாளரின் கதையானது மூன்று வேதாளங்களின் நிலைமை போன்றதாகும். கூட்டு எதிரணியினருக்கு ராஜபக்ஷவை தவிர வேறு உலகமே இல்லையா?.மொட்டு சின்னத்தில் உள்ளவர்களுக்கு முதுகெலும்பு இல்லையா?.மொட்டு சின்னத்தில் வேறு தலைவர்களுக்கு வருவதற்கு இடமில்லையா?. இது கட்சியா? என்பதனை கூட்டு எதிர்க்கட்சியினர் தமது இதயங்களை தட்டிக் கேட்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடக மற்றும் தொடர்பாடல் பிரதானியும் அமைச்சருமான ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
பிட்ட கோட்டேயில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
2020 ஆம் ஆண்டு கூட்டு எதிர்க்கட்சியின் ஊடாக வரவுள்ள ஜனாதிபதி வேட்பாளரின் நிலைமை மூன்று வேதாளங்களின் கதையைப் போன்றது. வேதாளத்தின் உள்ளே இருப்பதனை நாம் அறிவோம். அதனை நினைக்கும் போது எனக்கு வெட்கமாக உள்ளது. எமது நாட்டில் அரசியல் மூடப்பட்ட அறையை போன்றதாகும். மொட்டுவில் உள்ளவர்கள் தமது இதயங்களை தட்டிப்பார்க்க வேண்டும். கூட்டு எதிரணியினருக்கு ராஜபக்ஷவை தவிர வேறு உலகமே இல்லையா?. இனிமேல் வாழ்க்கையில் ஒருபோதும் அவர்கள் வரமாட்டார்கள்.
ஒரு சிலர் பஷில் ராஜபக்ஷ வரப்போவதாக கூறுகின்றனர். இன்னும் ஒரு சிலர் சமல் ராஜபக் ஷ என்று சொல்கின்றனர். அத்துடன் ஒரு சிலர் கோத்தபாய ராஜபக்ஷ வருவதாகவும் கூறுகின்றனர். அதனால் 3 வேதாளங்களை எடுத்துக்காட்டினேன். மூன்று வேதாளங்கள் உள்ளன. ஆனால் உள்ளே பெரிய வேதாளம் ஒன்று உள்ளது. அந்த வேதாளம் மறைந்திருந்து அனைத்தையும் கவனித்த வண்ணம் உள்ளது. அது யார் என்று நான் கூற வேண்டியதில்லை. எனினும் வேதாளம் நான்காக மாறுமோ தெரியாது. ஏனெனில் ஒருவேளை சிரந்தி ராஜபக்ஷவும் வருவதற்கு வாய்ப்பும் உள்ளது. யார் வருவார்களோ தெரியவில்லை. ஆனால் உண்மையாக கூறுவதாயின் வேதாளமாக 5 வருடங்களில் நாமல் ராஜபக்ஷவே வருவார். ஆகவே அனைவரும் ராஜபக் ஷவினரேயாவர். மொட்டு சின்னத்தில் உள்ளவர்களுக்கு முதுகெலும்பு இல்லையா?.வேறு தலைவர்களுக்கு வருவதற்கு இடமில்லையா?.இது கட்சியா? அல்லது வேறு ஏதாவதா? என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM