தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தலைவரான இம்ரான் கான் அடுத்த மாதம் 11 ஆம் திகதி பாகிஸ்தான் நாட்டு பிரதமராக பதவியேற்கவுள்ளதாக உத்தியோகப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானில் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் 116 தொகுதிகளில் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி வெற்றி பெற்றது.
முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 64 தொகுதிகளிலும், மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 43 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
பாகிஸ்தானில் ஆட்சி அமைக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 137 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், இந்த தேர்தலில் போதிய பெரும்பான்மையை எந்த கட்சியும் பெறவில்லை. 116 உறுப்பினர்களுடன் அதிக இடங்களை பெற்ற கட்சி என்ற வகையில் கூட்டணி அரசு அமைக்க இம்ரான் கான் கடந்த இருநாட்களாக சில தலைவர்கள் மற்றும் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்ற உறுப்பினர்களுடன் பேச்சிவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், அடுத்த மாதம் 11 ஆம் திகதி பிரதமராக இம்ரான் கான் பதவி ஏற்று கொள்வார் என பாகிஸ்தான் நாட்டு வானொலி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM