அடையாளம் காணப்படாத இளைஞனொருவன் புகையிரதத் தண்டவாளத்தில் மயங்கிக்கிடந்த நிலையில் அவரை மீட்டெடுத்து ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்த சம்பவமொன்று ஏறாவூரில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, ஏறாவூர் - மிச்நகர் பகுதியை ஊடறுத்துச் செல்லும் புகையிரதத் தண்டவாளத்தில் இளைஞர் ஒருவர் மயங்கிக் கிடந்துள்ளார்.
அடுத்து ஒரு சில நிமிடங்களில் புகையிரதம் அப்பகுதியைக் கடக்கப் போகும் தருணத்தில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் விரைந்து செயற்பட்ட உள்ளுர் கிராம மக்கள் குறித்த இளைஞனை தண்டவாளத்திலிருந்து மீட்டெடுத்து உடனடியாக அருகிலுள்ள ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
உடனடியாக இளைஞன் இன்னாரென அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவித்த உதவிக்கு விரைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டோர் குறித்த இளைஞனின் கழுத்தில் கிறிஸ்தவ மத அடையாளமான சொரூபம் பொறிக்கப்பட்டுள்ள சங்கிலி அணிந்திருந்ததாகவும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் மேலதிக விசாரணைகளில் ஏறாவூர் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM