உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் 2016ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் திகதி முதல் ஏப்ரல் 3ஆம் திகதி வரை நடைபெறுகிறது. போட்டியை நடத்த சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், மொஹாலி, டெல்லி, தர்மசாலா, நாக்பூர் ஆகிய 8 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து இந்திய கிரிக்கெட் சபையின் ஆலோசனை கூட்டம் மும்பையில் நேற்று நடந்தது. பின்னர் இந்திய கிரிக்கெட் சபை செயலாளர் அனுராக் தாகூர் நிருபர்களிடம் கூறியதாவது:-
உலக கிண்ண ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டோம். போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஒரு சில மைதானங்கள், தங்களது தயார்நிலைமை குறித்து இறுதி அறிக்கை மற்றும் அது தொடர்பான சான்றிதழ்கள் வரவில்லை.
சென்னையில் போட்டியை நடத்துவதில் சில பிரச்சினைகள் இருந்தது உண்மை தான்.
இதனால் இந்த விஷயங்களை தொடர்ந்து நிலுவையில் வைத்திருந்தோம். இருப்பினும் உலக கிண்ணப் போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பை சென்னை இழந்து விடவில்லை. சென்னையை பொறுத்தவரை அங்கு எந்தெந்த ஆட்டங்களை நடத்துவது என்பது மட்டுமே பிரச்சினையாக இருக்கிறது. இலங்கை அணி வீரர்கள் அங்கு விளையாட முடியாது.
மேலும் மூன்று கெலரிகள் பயன்படுத்த முடியாத நிலைமை இருக்கிறது. அதே நேரத்தில் தொடர்ந்து அந்த கெலரிகளை பயன்படுத்தாமல் ரசிகர்களை ஏமாற்றவும் முடியாது.
இவ்வாறு அனுராக் தாகூர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM