பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டுக்குள் நுழைய முற்பட்டவருக்கு விளக்கமறியல்

Published By: Vishnu

29 Jul, 2018 | 06:33 PM
image

(இரோஷா வேலு)

பாராளுமன்ற உறுப்பினர் அருந்திக்க பெர்ணான்டோவின் மாதிவெலயிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்துக்கு முறையற்ற வகையில் அத்துமீறி நுழைய முயற்சித்த நபரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

மாதிவெலயில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் தங்குமிட கட்டடத்தொகுதியில் முறையற்ற வகையில் உள் நுழைய முற்பட்ட இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணனின் சாரதியையே (வயது 41) இவ்வாறு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அத்துடன் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை நுகேகொட நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது நீதிவான் அவரை எதிர்வரும் ஆகஸ்ட் 10 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிரிஹாண விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டுவரும் நிலையில், சாரதியின் முறையற்ற நுழைதலுக்கான காரணம் தொடர்பில் இதுவரையில் தெரியவரவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40