இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியின் முதல் போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்று துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
அதன்படி இவ்விரு அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள முதலாவது போட்டி தம்புள்ளை மைதானத்தில் இன்று காலை 9.45 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி மூன்று வகைக் கிரிக்கெட் போட்டிகளிலும் இலங்கையுடன் மோதுகின்றது.
அந்தவகையில் முதலாவதாக நடைபெற்ற இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை அணி முழுமையாக வென்று அசத்தியது.
அதனைத் தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது.
அடிபட்ட சிங்கமாக ஒருநாள் தொடருக்கு வருகிறது தென்னாபிரிக்க அணி. அதனால் தங்களுடைய முழு பலத்தையும் ஒருநாள் தொடரில் இறக்குவார்கள் என்பது திண்ணம்.
அதேபோல் டெஸ்ட் தொடரில் தென்னாபிரிக்காவை வீழ்த்திய வெற்றி வேட்கையில் இருப்பதால் இலங்கையும் ஒருநாள் தொடரில் மேலும் நம்பிக்கையுடன் களமிறங்கும்.
டெஸ்ட் தொடரில் சோபிக்காத தென்னாபிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர்களான ரபடா மற்றும் ஸ்டெய்ன் ஆகியோர் ஒருநாள் தொடரில் தங்களை நிரூபித்துக் காட்டவேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் இலங்கை அணிக்கு நெருக்கடி கொடுப்பார்கள்.
அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான இலங்கை அணியைப் பார்க்கையில் சமபலம் பொருந்திய அணியாகவே காணப்படுகின்றது. ஆனாலும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான தனுஷ்க குணதிலக்க இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்தின் தடைபெற்றிருப்பதால் அவரும் அணியில் இல்லை. அதேபோல் உபுல் தரங்கவும் அணி
யில் இணைத்துக்கொள்ளப்படவில்லை.
ஆனாலும் குசல் ஜனித் பெரேரா அணிக்கு திரும்பியிருப்பது பலமே. அத்தோடு அணியில் புதிதாக பந்துவீச்சாளரான பிரபாத் ஜயசூரிய இணைக்கப்பட்டுள்ளார்.
தென்னாபிரிக்க அணியைப் பொறுத்தவரையில் டெஸ்ட் தொடரில் ஆடிய பலரும் ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
டிவில்லியர்ஸ் திடீரென ஓய்வை அறிவித்ததால் தற்போது தென்னாபிரிக்க அணி திணறி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனாலும் ஒற்றை வீரரை நம்பி அணி இல்லை என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் தென்னாபிரிக்கா இத் தொடரில் களமிறங்க வேண்டி உள்ளது.
சமபலம் பொருந்திய இரு அணிகளும் இன்று வெற்றி வேட்கையுடன் களமிறங்குவதால் டெஸ்ட் தொடரைப் போல ஒருநாள் தொடரும் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM