இலங்கையில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு சட்டவிரோதமான முறையில் கடத்தி செல்லப்பட்ட நட்சத்திர ஆமைகள் இன்று காலை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.
கொழும்பிலிருந்து கடந்த 3 தினங்களுக்கு முன்பு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்த போது மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விமானத்தை பரிசோதனை செய்த போது ஒரு இருக்கைக்கு அடியில் ஒரு பெட்டி கிடந்தது.
பெட்டியை உரிமைகோரி யாரும் வரவில்லை. இதனால் அதிகாரிகள் கேட்பாரற்று கிடந்த பெட்டியினை பறிமுதல் செய்து திறந்து பார்த்தனர். அப்போது அதில் சுமார் 22 கிலோ நட்சத்திர ஆமைகள் இருந்தது. உடனே அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்தனர்.
பின்பு விசாரணை நடத்தியதில் அந்தப் பெட்டியை யார் வைத்தார்கள் என்று கண்டு பிடிக்க முடியாத நிலை இருந்து வந்தது.
இதனைத் தொடர்ந்து அந்த ஆமைகளை வனத்துறையிடம் ஒப்படைத்தனர். அப்போது வனத்துறையினர் குறித்த ஆமைகளை பரிசோதனை செய்தபோது அந்த ஆமைகளின் மீது வைரஸ் கிருமி இருப்பதை கண்டறிந்தனர்.
இதனை தொடர்ந்து அதற்கான ஆவணங்கள் அனைத்தும் வைத்து மீண்டும் இலங்கைக்கு இன்று காலை விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டது. ஆமைகள் மருந்துக்காக கடத்தப்படுவதாக தெரியவந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM