குறைபாடுகள் இருந்தாலும் இனவாதத்திற்கு அடிபணிய மாட்டோம் - ராஜித

Published By: Vishnu

27 Jul, 2018 | 04:08 PM
image

(எம்.எம்.மின்ஹாஜ்)

நல்லாட்சியில் பல்வேறு குறைப்பாடுகள் இருந்தாலும் எமது அரசாங்கத்தின் எந்தவொரு தலைவரும் இனவாதத்திற்கு அடிப்பணிய மாட்டார்கள் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அளுத்கம, பேருவளை இன கலவரத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு நஷ்ட ஈடு வழங்கும் நிகழ்வு நேற்று பேருவளையில் நடைபெற்றது. இதன்படி கலவரத்தினால் சேதமடைந்த 122 வர்த்தக நிலையங்களுக்கும் வீடுகளுக்கும் 188 மில்லியன் ரூபா நஷ்ட ஈடு வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசியல்வாதிகள் இழைத்த பாரிய விளைவின் காரணமாகவே தற்போது நஷ்டஈடு வழங்க வேண்டிய தேவை  ஏற்பட்டது. அரசியல் வாதிகளினாலேயே இனவாதம் போஷிக்கப்படுகின்றது. அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்கு இனவாதத்தை தூண்டுகின்றனர். இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக போராட வேண்டும். இன,மத அடிப்படையில் வாக்குகளை பெறுவதனை நாம் நிறுத்த வேண்டும். 

அத்துடன் இனங்களுக்கிடையிலான பிரச்சினையை தீர்க்கும் வரைக்கும் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. அரசியல்வாதிகளினாலேயே இன கலவரங்கள் ஏற்படுகின்றன. 

நல்லாட்சியில் பல்வேறு குறைப்பாடுகள் இருந்தாலும் எமது அரசாங்கத்தின் எந்தவொரு தலைவரும் இனவாதத்திற்கு அடிப்பணிய மாட்டார்கள். பேருவளையை போன்று கிந்தோட்டை மற்றும் அம்பாறை கலவரத்தினால் பாதிக்கப்பட்டோருக்கும் நஷ்ட ஈடு வழங்குவோம். 

அத்துடன் வன்முறைகளில் ஈடுப்படுவோருக்கு நான் ஒருபோதும் அரசியல் ஒத்துழைப்புகள் வழங்க மாட்டேன். ஆகவே இனிமேலும் இனவாதத்தை தூண்டுவதற்கு இடமளிக்க மாட்டோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31