(எம்.மனோசித்ரா)
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அடைந்த தோல்வியின் காரணமாக மாகாண சபை தேர்தல்களையும் அரசாங்கம் திட்டமிட்டு காலம் தாழ்த்துவதாக கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில் கூட்டு எதிர்கட்சியின் நிலைப்பாட்டினை தெளிவுபடுத்துகையிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாகாண சபைத் தேர்தலை எந்த முறையில் நடத்தினாலும் அதற்கு முகங்கொடுப்பதற்கு கூட்டு எதிர்கட்சி தயாராகவேவுள்ளது. தற்போது மீண்டும் பழைய முறையிலேயே தேர்தலை நடத்துவது தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றது. இந்த வாரம் இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை. எனவே மீண்டும் அடுத்த வாரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சி தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது.
அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டு இவ்வாறான செயற்பாடுகள் அரங்கேற்றப்படுகின்றன. தேர்தலை காலம் தாழ்த்துவதற்காகவே அரசாங்கம் இவ்வாறு செயற்படுகின்றது. தேர்தல் காலம் தாழ்த்தப்படுகின்றமை இ நாட்டிற்கு பொருத்தமற்ற அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை உள்ளிட்ட விடயங்களுக்கு எதிராகவே அடுத்த மாதம் 5 ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM