"100 பந்து கிரிக்கெட் போட்டியில் 12 வீரர்கள் துடுப்பெடுத்தாடுவார்கள் என்ற செய்தி முற்றிலும் பொய்" என்று இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில்தான் வீரர்களின் உண்மையான திறமைகளைக் கண்டறிய முடியும் என்பதால் டெஸ்ட் கிரிக்கெட் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. கிரிக்கெட் தொடங்கிய காலத்தில் எத்தனை நாட்கள் ஆனாலும் இரண்டு இன்னிங்ஸ்களை முடித்தே தீர வேண்டும்.
நாளடைவில் அது 6 நாட்களாக குறைந்து தற்போது 5 நாட்களாக உள்ளது.
காலங்கள் மாற – மாற கிரிக்கெட் ரசிகர்கள் 5 நாட்கள் மைதானம் சென்று போட்டியைக் காண விரும்பவில்லை. இதனால் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் 50 ஓவர்கள் கிரிக்கெட் போட்டி தொடங்கப்பட்டது.
இது நாளடைவில் 20 ஓவர்கள் போட்டியாகியுள்ளது. இதற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் சபை 100 பந்துகள் போட்டியை அறிமுகப்படுத்தவுள்ளது. இப் போட்டியில் 12 வீரர்கள் விளையாடுவார்கள் என்று கூறப்பட்டது தான் உச்சக்கட்டம்.
தற்போதைய நிலையில் மாற்று வீரர் களத்தடுப்பு செய்யலாம். பந்து வீசவோ, துடுப்பெடுத்தாடவோ முடியாது. ஆனால் 100 பந்துகள் போட்டியில் துடுப்பாடவும் செய்யலாம் – பந்தும் வீசலாம் என்பது நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் செய்தித் தொடர்பாளர் இச் செய்தியை முற்றிலும் மறுத்துள்ளார். ‘‘100 பந்து கிரிக்கெட் தொடருக்கான முழு வடிவமானது இன்னும் உருவாக்கப்படவில்லை.
ஏராளமான பரிசோதனைப் போட்டிகள் நடத்தப்பட்ட பின்னர் தான் முடிவு செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM