ஸ்கொட்லாந்து பகுதியில் ஓடும் நதி ஒன்றின் பாறை இடுக்குகளில் இருந்து இலங்கை மதிப்பின் படி சுமார் ஒரு கோடி (£50,000 பவுண்ட்) மதிப்புள்ள தங்கக்கட்டி கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் ஸ்கொட்லாந்து பகுதியில் ஓடும் நதி ஒன்றில் இருந்து டக்ளஸ் என்ற 40 வயதுடையவரே குறித்த தங்கக்கட்டியினை கண்டெடுத்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தங்கக்கட்டியினை கண்டெடுத்த இவர், அது குறித்த இரகசியத்தினை யாரிடமும் வெளியிடாமல் நீண்ட காலம் மௌனம் காத்து வந்த நிலையில் தற்போது மனம் திறந்துள்ளார்.
இதுகுறித்த அவர் கூறுகையில், ஒரு நாள் ஆற்றில் முகத்தை புதைத்தவாறு படுத்திருந்தபொழுது, பாறையில் ஏற்பட்டிருந்த விரிசலை பின்தொடர்ந்தேன். அப்பொழுது அங்கிருந்த பாறைப்படுக்கைக்கு கீழே 2 கிராம் மதிப்புள்ள குறித்த தங்கக்கட்டியை பார்த்து ஆச்சர்யமடைந்தேன்.
பின்னர் என்னுடைய நண்பரை அழைத்தபோது, அவரிடம் காட்டியவேளையில் அதை பார்த்து விட்டு 5 முதல் 7 கிராம் வரை இருக்கும் என கூறினார்.
இதனை ஆய்வு செய்த தங்க நிபுணர் லியோன் கிர்க், தங்கக்கட்டி குறைந்தபட்சம் £50,000 பவுண்ட் மதிப்பு இருக்கும் எனவும் விரைவில் பிரித்தானிய அருங்காட்சியத்திற்காக வாங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த 1808 ஆம் ஆண்டு கார்ன்வால் பகுதியில் கண்டறியப்பட்ட 59 கிராம் தங்கக்கட்டியே பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கக்கட்டிகளில் மிகவும் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM