“பொதுச் சந்தையின் புதிய கட்டடத்திற்கு அனுமதி கிடைக்கவில்லை” 

Published By: Daya

26 Jul, 2018 | 03:23 PM
image

கிளிநொச்சி பொதுச் சந்தையின் புதிய கட்டடத்திற்கு இதுவரை அனுமதியும் கிடைக்கவில்லை, நிதியும் ஒதுக்கப்படவில்லை  என ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். 

கிளிநொச்சியின் பொதுச் சந்தையின் புதிய கட்டடத்திற்கு தற்போது வரை எவ்வித நிதியும் ஒதுக்கப்படவில்லை, அமைச்சரவை அனுமதி மாத்திரமே கிடைத்துள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

இன்று கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் சந்தையின் புதிய கட்டடம் தொடர்பாக இடம்பெற்ற  விசேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி பொதுச் சந்தைக்கான புதிய கட்டடம் அமைப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையினால் 767 மில்லியன் ரூபாவில் திட்டம் ஒன்று வரையப்பட்டு அது தொடர்பில் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  

அதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்தது  ஆனால் குறித்த திட்டம் தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் அனுமதிக்கு  இதுவரை அனுப்பி வைக்கப்படவில்லை அவை அடுத்தவாரமே அனுப்பப்படும் என நகர அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது. எனவே இதுவரைக்கும் எவ்வித நிதியும் ஒதுக்கப்படவில்லை.

ஆனால் கிளிநொச்சி பொதுச் சந்தை எரிந்த பின்னர் நான் அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் சுவாமிநாதன் ஆகியோருடன் பேசியதற்கு அமைவாக அவர்களால் அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டு 150 மில்லியன் நிதி புதிய சந்தை கட்டடம் அமைப்பதற்கு ஒதுக்கப்பட்டது. அதில் முதற்கட்டமாக 80 மில்லியன் நிதி மாவட்டச் செயலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.  ஆனால் அது வேறு திட்டத்திற்கு பயன்படுத்தப் பட்டுவிட்டது.

இதன் பின்னர் கிளி நொச்சிக்கான நகர அபிவிருத்தியினை நோக்காக  கொண்டு மாதிரி  சந்தை கட்டடம் ஒன்ற 767 மில்லியன் ரூபாவில்  நகர அபிவிருத்தி அதிகார சபையினரால் வரையப்பட்டு அமைச்சரவை அனுமதிக்கு  கொண்டு சென்ற போது அங்கு நிதி அமைச்சர்  சந்தை அமைப்பதற்கு  ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டது பின்னர் புதிய திட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது  இது பெருமளவு நிதி  என்பதனால் தேசிய திட்டமில் திணைக்களத்தின்அனுமதி பெறப்படல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

தற்போது  அதற்கான பணிகளை நகர அபிவிருத்தி அதிகார சபையினர் மேற்கொண்டு வருகின்றனர் ஒரு வாராத்திற்குள் அந்தப் பணிகள் நிறைவுறும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். 

எனவே இன்றை திகதி வரை  இது சம்மந்தமான எந்த நிதி ஒதுக்கீடும் கொடுக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் அனுமதி கிடைத்தவுடன்தான் இது செயற்பாடு அடுத்தக்கட்டத்திற்கு செல்லும் எனத் தெரிவித்த ஆளுநர் அதேநேரம்  இந்த புதிய திட்டமும் இன்னமும் அனுமதிக்கப்படவில்லை

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59